ராஜ்யசபாவில் 12% எம்.பி.க்கள் கோடிஸ்வரர்கள் , ஆந்திரா, தெல …

2 Min Read
ராஜ்யசபா

ராஜ்யசபா சிட்டிங் எம்.பி.க்கள் நான்கு பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றாவளிகளாக உள்ளனர் .

ராஜ்யசபாவின் தற்போதைய எம்.பி.க்களில் சுமார் 12 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிக சதவீதம் உள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் (NEW) ஆகியவை 233 ராஜ்யசபா எம்.பி.க்களில் 225 பேரின் குற்றவியல், நிதி மற்றும் பிற பின்னணி விவரங்களை பகுப்பாய்வு செய்து புதுப்பித்துள்ளன .

அறிக்கையின்படி, ஆந்திராவில் இருந்து 45 சதவீதம், தெலுங்கானாவில் இருந்து 43 சதவீதம், மகாராஷ்டிராவில் இருந்து 16 சதவீதம்,  டெல்லியிலிருந்து 33 சதவீதம் பஞ்சாபிலிருந்து 29 சதவீதம், ஹரியானவை சேர்ந்த  20  சதவீதம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 சதவீதம்  எம்.பி. கள் 100 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது .

தெலுங்கானாவைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.க்கள்) மொத்த சொத்து மதிப்பு ரூ. 5,596 கோடியாகவும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 11 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு ரூ.3,823 கோடியாகவும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 30 எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,941 கோடியாகவும் உள்ளது.ஆய்வின் போது 225 ராஜ்யசபா சிட்டிங் எம்.பி.க்களில் 75 (33 சதவீதம்) பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உடையவர்களாக உள்ளனர் .

மேலும் சுமார் 41 (18 சதவீதம்) ராஜ்யசபா சிட்டிங் எம்.பி.க்கள் கடுமையான குற்ற வழக்குகளையும், இரண்டு உறுப்பினர்கள் கொலை  (ஐபிசி பிரிவு 302).தொடர்பான வழக்குகளையும் நிலுவையில் வைத்துள்ளார் .

மேலும் ராஜ்யசபா சிட்டிங் எம்.பி.க்கள் நான்கு பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றாவளிகளாக உள்ளனர் . 4 எம்.பி.க்களில், ராஜஸ்தானைச் சேர்ந்த  காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் பெண்ணை பாலியல் பலாத்காரம் (ஐபிசி பிரிவு 376) செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக உள்ளார்.

பாஜகவின் 85 ராஜ்யசபா எம்.பி.க்களில் 23 (27 சதவீதம்), காங்கிரஸின் 30 எம்.பி.க்களில் 12 (40 சதவீதம்), ஏ.ஐ.டி.சி.யின் 13 எம்.பி.க்களில் 4 (31 சதவீதம்), ஆர்ஜேடியின் 6 எம்.பி.க்கள் 5 (83 சதவீதம்) , சி.பி.ஐ.(எம்.,) 5 எம்.பி.க்களில் 4 (80 சதவீதம்), ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்.பி.க்களில் 3 (30. சதவீதம்) மற்றும் ஒய்எஸ்.ஆர்.சி.பி.யின் 9 எம்.பி.க்களில் 3 (33 சதவீதம்சதவீதம் பேர் தாங்கள் தாக்கல் செய்துள்ள  பிரமாணப் பத்திரங்களில் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Share This Article
Leave a review