பிளஸ்1 மாணவரை மிரட்டி உல்லாசம்., இளம்பெண்ணுக்கு போக்சோ.!

0
92
போக்சோ

சிவகங்கை: பிளஸ் 1 மாணவரை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்ட 3 குழந்தைகளின் தாயான 27 வயது இளம் பெண் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கைது செய்யப்பட்டார்.
இந்த இளம் பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . சிவங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பள்ளி ஒன்றல் பிளஸ் 1 படித்து வருகிறார் 16 வயது மாணவர் ஒருவர். இவருடைய பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய கணவர் வெளியூரில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
எப்போதாவது ஒரு முறை தான் ஊருக்கு வந்த செல்வாராம். இதனிடையே அந்த இளம்பெண்ணுக்கு, பிளஸ் 1 மாணவர் உறவினர் ஆவர். அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்துள்ளார் சிறுவன்.

எனவே சிறுவன் வீட்டுக்கு இளம் பெண் வருவதையோ, சிறுவன் இளம் பெண்ணின் வீட்டிற்கு செல்வதை யாரும் தவறாக நினைக்கவில்லை. இந்த நிலையில் அந்த மாணவருக்கும்,
இளம்பெண்ணுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சில நாட்களாக அந்த மாணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. மாணவர் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். யாரிடமும் சரிவர பேசாமலும் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவனின் பெற்றோர், அதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது மாணவர் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உறவினரான அந்த இளம்பெண் கடந்த 3 மாதமாக தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு செய்து வந்ததாக கூறியிருக்கிறார்.

அடிக்கடி பாலியல் உறவு இருவரும் வைத்துக்கொண்டது குறித்தும் சிறுவன் கூறியுள்ளார். இதையடுத்து மாணவரின் பெற்றோர், இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிளஸ்1 மாணவரை மிரட்டி உல்லாசம் அனுபவித்த இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here