காஞ்சிபுரத்தில் IFS நிதி நிறுவன கிளை இயக்குநர் ஆனந்த செல்வராஜ் உறவினர் வீடு முற்றுகை

0
111
வளத்தோட்டம்பகுதி

காஞ்சிபுரம் குருவிமலையை அடுத்த வளத்தோட்டம்பகுதியிலுள்ள அவரது அக்கா ராதாம்மாள் வீட்டை முற்றுகையிட்டு வரும் முதலீட்டாளர்கள்.1வருட காலமாக தலைமறைவாக இருந்துவரும் நிலையில்,பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளித்து வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா,இருசக்கர வாகனத்தை உடைப்பு.சுமார் 5000-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 200கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாக புகார்.

பொது மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 6 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட, ஐ.எப்.எஸ் நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இது தொடர்பாக 19பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இதுவரை 6பேரை பொருளாதார குற்றபிரிவு போலீசார் கைது செய்திருக்கின்றனர்.இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள்,16 கார்கள், 46 அசையா சொத்துக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதலும் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசி வாழைபந்தல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வராஜ்.இவர் காஞ்சிபுரம் குருவிமலை அடுத்துள்ள வளத்தோட்டம் பகுதியிலுள்ள தனது அக்கா ராதாம்மாள் என்பவரது வீட்டில் தனது சிறுவயது முதலே வசித்துவந்துள்ளார். அவர் தொழிற்சாலைகள் நிறைந்த ஒரகடம் பகுதியில் IFS நிதி நிறுவன கிளை அலுவலகத்தை நடத்திவந்துள்ளார்.

இதனால் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பலர் ஆனந்த் செல்வராஜ் நடத்தக்கூடிய இக்கிளை அலுவலகத்தில் பணம் செலுத்திவந்துள்ளனர்.அதே போல் இவரது அக்கா அமைந்துள்ள வளத்தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள களக்காட்டூர்,ஓரிக்கை,தூசி போன்ற சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இவரது நிருவனத்தில் பணம் கட்டியிருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக ஆனந்த் செல்வராஜ் தலைமறைவாக இருந்துவருவதாக கூறப்படும் நிலையில், தங்களது பணம் குறித்த அவரது அக்கா ராதாம்மாளிடம் தொடர்ந்து கேட்டுவந்ததாகவும், இன்று அவரது அக்கா வீட்டிற்கு சென்ற பாதிக்கப்பட்டவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பணம் குறித்து கேட்டபோது, என்னிடம் கேட்காதீர்கள் என பதலளித்த நிலையில், கொந்தளித்த பாதிக்கப்பட்டவர்கள் அந்த வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமரா மற்றும் இருசக்கர வாகனத்தினை அடித்து உடைத்திருக்கின்றனர்.பின்னர் அந்த வீட்டினை முற்றுகையிட்ட நிலையில் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததன் பெயரில் முற்றுகை போராட்டத்தினை கைவிட்டு களைந்து சென்றனர்.

தீடிரென IFS நிதி நிறுவன இயக்குநர் வீட்டினை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.ஐஎப்எஸ் கிளை இயக்குநராக செயல்பட்டு வந்த ஆனந்த் செல்வராஜ் ஒரகடம் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வளத்தோட்டம் சுற்றியுள்ளவர்கள் என சுமார் 5000-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 200கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது தனது பினாமி பெயரில் வைத்திருக்கும் சொத்துக்கள் விற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here