செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் தனது பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பங்கேற்பார் என்று ஆஸ்திரேலியா சனிக்கிழமை அறிவித்தது.
ஆஸ்திரேலியப் பிரதமரின் இந்தியப் பயணம் அவரது மூன்று நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

“செப்டம்பர் 9-10 வரை, புதுதில்லியில் நடைபெறும் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார்” என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

G20 என்பது உலகப் பொருளாதார ஒத்துழைப்புக்கான உலகின் தலைசிறந்த மன்றம் என்றும், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் வலுவான, நிலையான மற்றும் நெகிழ்ச்சியான வளர்ச்சிக்குக் கொண்டு செல்வதில் தலைவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.