யானை பொம்மையினை உடைத்து பாகுபலி யானைசேதம்.

0
81
பாகுபலி யானை

மேட்டுப்பாளையம் ஓடந்துறை,சமயபுரம், வெல்ஸ்புரம், தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு மாதங்களுக்கு பின்னர் பாகுபலி என மக்களால் அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.பாகுபலி யானை ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை இந்த பாகுபலி யானை பொதுமக்கள் எவரையும் தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை.இருந்தாலும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை மட்டுமே தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு மேட்டுப்பாளையம் –  கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளிய பாகுபலி யானை கல்லூரி வளாகத்தில் ஒய்யாரமாக நடந்து சென்றது.பின்னர், அங்குமிங்கும் உலாவிய காட்டு யானை அங்கு யானை போன்ற உருவம் பொறிக்கப்பட்ட சிலையினையும் உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வனக்கல்லூரியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.

வனக்கல்லூரியில் நுழைந்த பாகுபலி யானை குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும. மேலாக போராடி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதுவரை பாகுபலி யானை மனிதர்களை ஏதும் தொந்தரவு செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் குணம் மெல்ல மெல்ல மாறி வருவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here