Home Blog

விழுப்புரம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீத வாக்குகள் பதிவு

0
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சி பழனி
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு .
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீத வாக்குகள் பதிவு

தமிழக அமைச்சர் பொன்முடி குடும்பத்துடன் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். தமிழக முதலமைச்சரின் முயற்சி இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார் .

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவுடன் தொடங்கியது. விழுப்புரத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ,   சுயேட்சி வேட்பாளர்கள் என மொத்தமாக 17 வேட்பாளர்கள் பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

2024- ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல்  விழுப்புரம் (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கு (வெள்ளிக்கிழமை) இன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,44,350 பெண் வாக்காளர்கள் 7,58,545 மற்றும் இதர வாக்காளர்கள் 220  வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு விழுப்புரம் தனி தொகுதிக்கு 1732 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர்.

விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன்

மேற்படி வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு விழுப்புரம் பானை கிராமத்தில் ஒரு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனை செறி செய்யும் வேலையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சி பழனி
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தூய பால்ஸ் நர்சரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சி பழனி தனது வாக்கினை செலுத்தினார்  .
இதேபோல் விழுப்புரம் எம்ஆர்ஐசி உயர்நிலைப் பள்ளியில் குடும்பத்துடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாக்கு செலுத்தினார் .
விழுப்புரம் எம்ஆர்ஐசி உயர்நிலைப் பள்ளியில் குடும்பத்துடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாக்கு செலுத்தினார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக முதலமைச்சர் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இதேபோல் பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்திலும்    , விழுப்புரத்தில் , விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் , விழுப்புரம் நாடளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின்  வேட்பாளர் மற்றும் விசிக கட்சி பொது செயலாளருமான துரை ரவிக்குமார் , அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் தங்களது வாக்குகளை செலுத்தினர் .
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் மு.களஞ்சியம்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்கள் சென்னையில் உள்ள ராமாபுரத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினார் .
விழுப்புரம் சரக டிஐஜி
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் விழுப்புரம் சரக டிஐஜி மற்றும் எஸ்பி தனித்தனியே நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர் .

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்..

0
மதுரை உயர் நீதிமன்றம்
  • தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யக்கோரி   அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இந்த வழக்கில் மனுதாரர் 20 வயதானவர். இவரும் 19 வயது இளம் பெண் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் சந்தித்தபோது இரவு வெகு நேரம் பேசியுள்ளனர்.

 

அப்போது மனுதாரர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறி மனுதாரர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.காதலிப்பவர் கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த வரக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறையினர் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/

இந்த வழக்கையும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது.ஆகவே மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கையும், கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனு..

0
சென்னை உயர்நீதிமன்றம்
  • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.அரவிந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிப்பதற்கு அதிகாரமில்லை எனக்கூறியுள்ளார்.எனவே, அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அதற்கு காரணமான அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் , எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதனடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த மனுதாரர், செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வழக்குக்கு தொடர்பில்லாத நபர் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை எனக்கூறினார்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/

இந்த மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறியதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலுக்குப் பிறகு பள்ளிகளை சுத்தப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

0
சென்னை உயர்நீதிமன்றம்
  • தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா என விளக்கம் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல்களின் போது, வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அறிவிப்புகள், வாக்குசாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளி, கல்லூரிகளின் சுவர்களில் ஒட்டப்படுகின்றன.

ஆனால் தேர்தலுக்குப் பிறகு இந்த அறிவிப்புகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப் படுவது இல்லை எனக் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளிகளின் சுவர்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுதந்திரப் போராட்ட தலைவர்கள் மற்றும் தேசத்தலைவர்கள் படங்கள், கதைகள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை தூண்டும் படங்கள் வரையப்பட்டுள்ளன என்றும், வாக்குச்சாவடியில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகளை ஓட்டுவதால் பள்ளி சுவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் தேர்தல் முடிந்தபின் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகள், உணவுப் பொட்டல கழிவுகள் மற்றும் காகிதப் பொருட்கள் அகற்றப்படுவதில்லை என்றும் பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் தான் சுத்தப்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிந்தபின் வாக்குச்சாவடியை சுத்தம் செய்ய எவ்வித பணமும் ஒதுக்கீடு செய்வதில்லை என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பத்துக்கு பதிலளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், வாக்குச்சாவடிகளில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகளை ஒட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், தேர்தலுக்கு பிறகு வாக்குச் சாவடியை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யவும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை சுத்தம் செய்து கொடுப்பதற்கு வழிகாட்டி நெறிமுறைகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து டிசம்பர் 12ஆம் தேதி தெரிவிக்கும் படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/

தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தேர்தல்களின் போது, வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அறிவிப்புகள், தேர்தலுக்கு பிறகு அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்படுவது இல்லை. வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகள், உணவுப் பொட்டல கழிவுகள், காகிதப் பொருட்கள் அகற்றப்படுவதில்லை. பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் தான் சுத்தப்படுத்துகின்றனர்” என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

0
சென்னை உயர்நீதிமன்றம்
  • எம். பி – எம்.எல்.ஏ.ககளுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி – எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் தற்போதைய புள்ளி விவரங்களை வழங்க வேண்டும் எனவும் ஊழல் வழக்குகள் விசாரணைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்டு தற்போது உயர் நீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்ட வழக்குகளின் விவரங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த விபரங்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேபோல எம்பி – எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், தலைமை பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

எம். பி – எம்.எல்.ஏ.ககளுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/3-trucks-collided-one-after-the-other-near-kummidipoondi/

அதேபோல பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட எம்பி – எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்து பிறப்பித்த உத்தரவின் மூலமாக மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள அந்த வழக்குகளின் விபரங்களையும் அறிக்கையாக அளிக்க வேண்டும் என தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2025 ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்த குரங்கு குட்டி விவகாரம் : குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு..

0
சென்னை உயர் நீதிமன்றம்
  • தெரு நாய்களால் கடிபட்டு கால்நடை மருத்துவரின் சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கால்நடை மருத்துவர் வல்லயப்பன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் கொண்டு வந்ததாகவும், சுமார் 10 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு குட்டியை வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால், குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குரங்கு குட்டியை பார்வையிட கால்நடை மருத்துவருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த 9ம் தேதி கால்நடை மருத்துவர் வல்லியப்பன், தனது மகள் மற்றும் வழக்கறிஞருடன் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை பார்வையிட்டனர்.இந்த நிலையில், வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் தரப்பில் வழக்கறிஞர் ஶ்ரீனிவாசன் தாக்கல் செய்த அறிக்கையில், தற்போது, குரங்கு குட்டிக்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உரிய சிகிச்சையும், சிறந்த உணவும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டது.

சிகிச்சைக்காக மட்டுமே குரங்கு மனுதாரரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஆனால், ராணிப்பேட்டையில் இருந்து கோவைக்கு சட்டவிரோதமாக குரங்கைக் கடத்தியதாகவும், அதிகாரிகள் குரங்கை சரணடையுமாறு தெரிவித்தும், மீண்டும் ஓசூருக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலின் இணையதளத்தை சரிபார்த்தபோது, மனுதாரர் பெயர் நீக்கபட்டிருந்ததாகவும், குரங்கு குட்டியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/

இதையடுத்து நீதிபதி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது என மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மனுதாரர் தரப்பில், குரங்கு குட்டியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தல்: தேவியின் வெற்றி செல்லாது, பிரியதர்ஷினியின் வெற்றி உறுதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

0
  • காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தேவியின் வெற்றி செல்லாது என்றும் தேவியை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி என்பவரின் வெற்றி தான் செல்லும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவரின் மனைவி தேவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் (2019) நடைபெற்றது 2020 ஜனவரி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது முதலில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் நான் (தேவி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் எனக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிறிது நேரத்தில் என்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரணை செய்த நீதிமன்றங்கள் தேவியின் வெற்றி செல்லும் என அறிவித்தது மேலும் பிரியதர்ஷினி விசாரணை நீதிமன்றத்தை நாடி தனது தேர்தல் வழக்கை நடத்தி உரிய பரிகாரம் தேடிக் கொள்ளலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

நீதிமன்ற உத்தரவின் படி பிரியதர்ஷினி சிவகங்கை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தேவியின் வெற்றி செல்லாது பிரியதர்ஷினி வெற்றி தான் செல்லும் என கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தனது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என தேவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜராகி.

மதுரை உயர் நீதிமன்றம்

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/tiruvallur-district-workers-strike-at-kattupally-sea-water-desalination-plant/

விசாரணை நீதிமன்றம் மிகச் சரியாக விசாரணை செய்து பிரியதர்ஷினி வெற்றியை உறுதிப்படுத்தி உத்தரவு பிறப்பித்தது குறிப்பாக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டு தொகையில்தான் வேறுபாடு வந்தது மீண்டும் கூட்டி வாக்குகளை எண்ணும் போது பிரியதர்ஷினி வெற்றி உறுதி செய்யப்பட்டது எனவே கீழமே நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும் தேவியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பின் வாதத்தை பதிவு செய்த நீதிபதி தேவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உள்ளாட்சி தேர்தலில் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி வெற்றியை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும்..என அறநிலையத்துறை தரப்பில் உறுதி தெரிவிப்பு…

0
  • சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என அறநிலையத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோவில் கொடிமரத்தை அகற்றி விட்டு, புதிய கொடிமரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவிந்தராஜரின் பக்தர் ஹரிஹரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

  

அந்த மனுவில், கொடிமரம் தொடர்பாக சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையில் 1860 ம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டதாகவும், இது சம்பந்தமான வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது.

அதன்படி கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக் கொள்வது எனவும், எந்த பூஜையும், பிரம்மோற்சவ விழாவும் நடத்தக் கூடாது என சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 160 ஆண்டுகளாக எந்த பிரமோற்சவம் நடத்தப்படவில்லை என்றும், தற்போது கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைப்பது, முன்சீப் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது மட்டுமல்லாமல், சடங்கு – சம்பிரதாயங்களுக்கு எதிரானது என்பதால், தில்லை கோவிந்தராஜர் கோவிலில் புதிய கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எனவும், புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி அறநிலைய துறைக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் புதிய கொடி மரத்தை அமைத்துவிட்டு பின்னர் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலை துறை திட்டமிட்டுள்ளது என்பதால் புதிய கொடிமரத்தை அமைக்க கூடாது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை மறுத்த அறநிலையைத் துறை தரப்பு வழக்கறிஞர் பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளதால் தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது என்றும் கொடிமரம் சேதமடைந்துள்ளதால் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/

அறநிலையத்துறை தரப்பின் இந்த வாதம் குறித்து ஆணையர் ஒரு வாரத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் : நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..

0
  • நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அந்த உத்தரவில், கூறியுள்ளதாவது..

“மனுதாரரின் சர்ச்சைக்குரிய அறிக்கையை பரிசீலித்ததில், தெலுங்கு பேசும் மக்களை, ராஜாவின் மனைவிகள் மற்றும் அந்தப்புரத்திலிருப்பவர்களுக்கு சேவை செய்ய தமிழகத்திற்கு வந்தவர்கள் என மனுதாரர் விவரித்திருப்பது தெரிகிறது.

 

 

பேச்சு சுதந்திரம் அடிப்படை உரிமை. இது தனிநபர்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்த அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும் இந்த பேச்சுரிமை பொறுப்பையும் கொண்டுள்ளது. சுதந்திரமாகப் பேசும் உரிமையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. பேச்சுரிமை எனும் பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது.

பொது மேடைகளில் இதுபோன்ற பிரச்சனைகளை பேசுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். குறிப்பாக சமூக வலைதளங்களில் பேசப்படுபவை நிரந்தர பதிவாகிவிடும்.பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மொழியின் அடிப்படையில் இழிவுபடுத்தும் போது சகிப்புத்தன்மை ஆக இருக்க வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளில், பொது நலனையே நீதிமன்றத்தின் மனதில் கொள்ளும். இதுபோன்ற கீழ்த்தரமான அறிக்கைகள் வெளியிடப்படும்போது நீதிமன்றம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது மோசமான முன்மாதிரியை உருவாக்கிவிடும்.

இதுபோன்ற கேவலமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவது இனிமேல் ஏற்றுக் கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும்.

இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் இது மாதிரியான வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிவிட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக மன்னிப்பு கோரலாம் என்றாகிவிடும்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/madras-high-court-refuses-to-hear-two-newly-filed-cases-against-deputy-chief-minister-udayanidhi-stalin/

உங்கள் வார்த்தைகளை கருணைஎயுடன் கையாளுங்கள். பிரிவினையை காட்டிலும் இரக்கத்தை வளர்க்கும் உரையாடல்களை மேற்கொள்வோம். அவ்வாறு செய்வதன் மூலம், பேச்சு சுதந்திரத்தின் உண்மையான சாராம்சத்தை மதிப்போம். ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான கருவியாக அதனை பயன்படுத்துவோம் என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

0
சென்னை உயர் நீதிமன்றம்
  • துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டீ சர்ட் அணிந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்த ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த டி ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், முதலமைச்சர் , துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகள் வகுக்கக் கோரியும் மேலும் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இரு வழக்குகளும் தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது ஒரே விவகாரத்துக்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு முதலில் தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுதாரர் சேர்க்க கோரலாம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து இரு மனுக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/case-against-chief-minister-stalins-withdrawal-of-flyover-scam-case-against-minister-ponmudi/

அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கில் இடையிட்டு மனுதாரர்களாக சேர்க்க கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

சென்னை : கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் விவகாரம் : பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…

0
  • சென்னையில் கடந்த பத்தாாண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

 

அங்கு கடந்த அக்டோபர் 9ம் தேதி மாணவர் சுந்தர் மரணம் அடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாணவர்களின் பெற்றோர்களை ஆஜராக உத்தரவிட்டார்.

இந்நிலையில், வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது மாணவர்களின் பெற்றோர்கள் ஆஜராகி இருந்தனர்.அப்போது ஆஜரான காவல்துறை வழக்கறிஞர் அருள்செல்வன், கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஒரு செமஸ்டர்க்கு பத்துக்கும் குறைவான நாட்களே கல்லூரிக்கு சென்றுள்ளதாக கூறினார்.

மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, சிறையில் உள்ள மாணவர்கள் குறித்து மட்டும் கவலைப்படும் நீங்கள் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தை பற்றி ஏன் கவலைப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

வருகைப் பதிவேட்டை வைத்து பார்க்கும் போது அவர்கள் பொறுப்பான மாணவர்களாக தெரியவில்லை எனக்கூறிய நீதிபதி இறந்த மாணவன் பில்லியனர் வீட்டு பையன் கிடையாது, சாதரண கூலி வேலை செய்பவர் மகன்,
அதை உணரவே பெற்றோர்களை ஆஜராக உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் வெறும் அடிதடி சம்பவமாக இருந்தது தற்போது கொலை சம்பவமாக மாறியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இது போன்ற சம்பவங்களை தடுக்க நிச்சயம் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/

இதனையடுத்து , சென்னையில் கடந்த பத்தாாண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறைமற்றும் ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் நிலை, சமரசமானவை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

“பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழாவில் பக்தர்களின் உற்சாகப் பங்கேற்பு”

0
  • பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஆனந்த லிங்கேஸ்வரருக்கும் இஷ்டலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அலங்காரத்துடன் விஷேச வழிபாடு நடத்தப்பட்டது.விழாவின் சிறப்பம்சமாக நந்தீஸ்வரருக்கு பால், தேன், பன்னீர்,விபூதி, மற்றும் வாசனை திரவியங்களுடன் செய்யப்பட்ட அபிஷேகத்தை பக்தர்கள் கண்குளிர கண்டு பக்திப்பெருக்குடன் வணங்கினர்.

இதை தொடர்ந்து ஆனந்தவள்ளி தாயாருக்கும் அகத்தீஸ்வரருக்கும் மஹாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஜொலித்த நந்தி பகவானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ சிவபெருமான் ஐந்து முறை பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் என்பது சிவபிரார்த்தனைக்கு மிகவும் பரமகிருஷ்ணமான நேரம் ஆகும். இதில் ஆனந்த லிங்கேஸ்வரருக்கும் மற்றும் இஷ்டலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அலங்காரங்களுடன் விசேஷ வழிபாடு நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் பெரும்பாலும் சிவபிரார்த்தனை செய்து, பக்தர்கள் தங்கள் மனக் கனவுகளை சிவபெருமான் முன் வைக்கின்றனர். விழாவின் முக்கிய அம்சமாக, நந்தீஸ்வரருக்கு (சிவபெருமானின் வாகனம்) பால், தேன், பன்னீர், விபூதி, மற்றும் வாசனை திரவியங்களுடன் அபிஷேகத்தைச் செய்தனர்.

இந்த அபிஷேகம் நடக்கும் போது பக்தர்கள் அதனை கண்குளிர்ந்துப் பார்த்து மிகுந்த பக்தி உணர்வுடன் சிவபெருமனை வணங்கினர். இவ்வாறான அபிஷேகம், பக்தர்களின் ஆன்மிகத்தில் ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் அது தங்களின் விசுவாசத்தை சிவபெருமானிடம் நிலைத்திருக்க வைக்கின்றது.

விழாவின் இறுதியில், சிவபெருமான் ஐந்து முறை பிரகார உலா (பிரதான கோயிலின் சுற்றுச்சுவர் சுற்றி நடப்பது) மேற்கொண்டார். இந்த செயல்பாடு, பக்தர்களுக்கு சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கான நேரம் ஆகும். மேலும், இந்த பிரகார உலா தொடக்கம், அந்தந்த பக்தர்களுக்கு பெரும் ஆன்மிக குணங்களை மற்றும் அன்பை உண்டாக்கும் நிகழ்வு ஆகும்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/gandashashti-ceremony-was-held-at-andarkuppam-balasubramania-swamy-temple-near-ponneri-with-much-fanfare/

இந்த நிகழ்வு முழுவதும் மேளதாளம் மற்றும் பக்தி இசையுடன் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அங்கு பங்கேற்ற அனைத்து பக்தர்களும் ஒன்றிணைந்து சிவபெருமானை வணங்கினர். இந்த விழா பரம்பரையாக தமிழகத்தில் நடக்கும் சிவபெருமானின் பெரும் திருவிழாக்களில் ஒன்று, அது பக்தர்களின் மனதில் நிலைத்திருக்கும் ஆன்மிக பசுமையை மேலும் பலப்படுத்தும் ஒரு நாள் ஆகும்.

“சென்னை உயர் நீதிமன்றம் ஓம்கார் பாலாஜிக்கு முன் ஜாமீன் கோரிய வழக்கில் உத்தரவு வெளியிடவில்லை; இந்து மக்கள் கட்சி, நக்கீரன் பத்திரிகை வழக்கில் போலீசாரின் நடவடிக்கை”

0
  • இந்து மக்கள் கட்சி இளைஞரணியின் தலைவர் ஓம்கார் பாலாஜியின் முன் ஜாமீன் கோரிய வழக்கில், கைது செய்ய தடை விதிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்புவதாக நக்கீரன் பத்திரிகையை கண்டித்து கோவையில் கடந்த 27 ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜி, நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக, திமுகவை சேர்ந்த அப்துல் ஜலீல் என்பவர் அளித்த புகாரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து ஓம்கார் பாலஜி சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கோருவது தொடர்பாக கால அவகாசம் கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி ஜெகதிஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது அப்போது ஓம்கார் பாலாஜி தரப்பில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது, அதில் உயர் நீதிமன்றத்தை தான் மதிப்பதாகவும், உயர் நீதிமன்றம் உத்தரவின் படி தான் மன்னிப்பு கோருவதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

இதனை படித்து பார்த்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவின் படி மன்னிப்பு கேட்பாதாக மனுவில் கூறியிருப்பதை நீக்கிவிட்டு, உங்களுடைய பதிலை மனுவில் திருத்தி தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அதனை ஏற்க மறுத்த ஓம்கார் பாலாஜி, மன்னிப்பு கேட்பது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.

காவல்துறை தரப்பில், பத்திரிக்கையாளரை மிரட்டும் வகையில் ஓம்கார் பாலாஜி பேசிய ஒலிப்பதிவு இருப்பதாகவும்,( நக்கீரன் கோபால் நாக்கை வெட்டிவேன்) தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, ஓம்கார் பாலாஜி, முன் ஜாமீன் கோரிய வழக்கில், போலிசார் அவரை கைது செய்ய தடை விதிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் இல்லை என தெரிவித்து வழக்கின் விசாரணையை நவம்பர் 19 ம் தேதி தள்ளி வைத்தார்.

இந்து மக்கள் கட்சியின் தாய் அமைப்பான இந்து முன்னணி , ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தால் ( ஆர்எஸ்எஸ் ) தமிழ்நாட்டில் அதன் அரசியல் நடவடிக்கைகளுக்கான முன்னணியாக அமைக்கப்பட்டது .

இந்து முன்னணி அமைப்பு 1980 ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் உறுப்பினரான ராம கோபாலனால் நிறுவப்பட்டது , அதன் உருவாக்கம் முதல் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளான சங்பரிவார்களுக்கான தளமாக செயல்பட்டது.

இந்த அமைப்பு ஒரு இந்து வகுப்புவாத அடையாளத்தை ஊக்குவித்து, அதை ஒரு அரசியல் அணிதிரட்டல் உத்தியாகப் பயன்படுத்தியது. 1990 களின் முற்பகுதியில், திமுகவின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிர்வினையாக அதிமுக ஜெயலலிதா அரசு (1991-1996) இந்துத்துவா பக்கம் சாய்ந்தது .

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விநாயக சதுர்த்தி ஊர்வலங்களை நடத்துவதில் இந்து முன்னணியின் செயல்பாடுகளுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆதரவு அளித்தது. ராம கோபாலனின் நடவடிக்கைக்கு மாநில அரசின் ஆதரவு அவரை ஜெயலலிதாவின் சீடராக மாற்றியது .

இந்த நெருக்கத்தால், இந்து முன்னணியின் ஒரு பிரிவினர் பிரிந்து சென்று, 1993ல் எஸ்.வி.ஸ்ரீதர் தலைமையில், இந்து மக்கள் கட்சி என்ற மற்றொரு குழுவைக் கண்டுபிடித்தனர். இரு குழுக்களின் போராளிகளும் , முஸ்லிம்களுக்கு எதிராக, துஷ்பிரயோகம் மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினர்.

இஸ்லாம் மற்றும் முஹம்மதுக்கு எதிரான ஆத்திரமூட்டும் பேச்சுகள் அப்பகுதியின் சமூக சூழலை துருவப்படுத்தியது. அவர்களின் முஸ்லிம் விரோத பேச்சுகளும் செயல்பாடுகளும் அல் உம்மா என்ற முஸ்லிம் குழுவை உருவாக்க வழிவகுத்தது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/chief-minister-stalin-is-going-to-virudhunagar-today-2-day-tour-participation-in-vehicle-rally/

ஜெயலலிதா ஆட்சியில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் தடையின்றி தொடர்ந்தன. அதிமுக உடனான பாஜக கூட்டணி ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் தமிழகத்தில் மேலும் பரவ வழிவகுத்தது. இந்த அமைப்புகள் தங்கள் பலத்தை ஒருங்கிணைத்து மத விழாக்களை பயன்படுத்தி கலவரங்களை ஏற்படுத்தினர்.

LATEST