அமைச்சர் சி.வி.கணேசன்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் சிவி கனேசன் சேகர் பாபு ஆகிய இருவரும் விக்கிரவாண்டி நகர பகுதிகளில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அமைச்சர் சேகர்பாபு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முண்டியம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கீதா ஜீவன் பெண்கள் மாணவர்களுக்கு வழங்கிய திட்டங்களே திமுக அரசின் சாட்சி என்றார்.அதனால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் நாடு சிறக்கும் என்றார்.

அமைச்சர் கீதாஜீவன்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிற நிலையில் அவரை ஆதரித்து அமைச்சர்கள் விக்கிரவாண்டி பகுதியில் தொடர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து இந்து சமய நிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தொழில்துறை அமைச்சர் சிவி கனேசன் ஆகிய இருவரும் விக்கிரவாண்டி நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது நகர பகுதி மக்கள் வசிக்க கூடிய மேட்டுத்தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெரு ஆகிய பகுதிகளில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு அமைச்சர்களும் நடந்தே சென்று வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர்களுக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் சிவி கனேசன் தமிழ்நாட்டை ஆளுங்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த நல்ல பல திட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக திமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்போம் என்று வாக்காளர்கள் தெரிவிப்பதாக அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்தார்.இதுவே திமுக வின் வெற்றி என்றார்.

மேலும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது மகளிர் உரிமைத்தொகை ஒரு மகத்தான திட்டம் தமிழக முதல்வர் வழங்கிய திட்டங்களில் மிக முக்கியமான திட்டமாக இது கருதப்படும் அதேபோன்று பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் பொதுமக்கள் பெற்றோர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இதுபோல பல திட்டங்கள் தான் திமுக ஆட்சியின் சாட்சியாக இருந்து வருகிறது என்று பேசினார்.முன்னதாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மக்களிடம் திமுக அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் சி.வி.கணேசன்வாக்கு சேகரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here