முஸ்லீம் பயணிகள் தொழுகைக்கு பேருந்தை நிறுத்திய கண்டக் …

1 Min Read

பயணிகள் தொழுகைக்கு பேருந்தை நிறுத்தியதால் வேலை நீக்கம் செய்யப்பட்ட கண்டக்டர் பணிநீக்கம் – உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த துயரசம்பவம்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். இவர் அம்மாநில போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த கண்டக்டராக வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பெரேலியில் இருந்து டெல்லி ஜன்ராத் சென்ற பேருந்தில் கண்டக்டர் பணியில் இருந்துள்ளார்.  சில பயணிகள் தொழுகை நடத்துவதற்காக பேருந்தை நிறுத்த கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனால் நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.  

- Advertisement -
Ad imageAd image

மோஹித் யாதவ்தான் அவரது வீட்டிற்கு மூத்த பிள்ளை. அவருடைய 17 ஆயிரம் சம்பளத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது. கண்டக்டர் வேலையில் இருந்து நீக்கியதும் பல இடங்களில் வேலை தேடி அலைந்துளார். ஆனால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. மேலும், மண்டல மேலாளரிடம் நிலைமை குறித்து விளக்கம் அளிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர், கடந்த திங்கட்கிழமை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது குடும்பர் செய்வதறியாமல் உள்ளது. மோஹித் யாதவின் மனைவி ரிங்கி யாதவ் ”உத்தர பிரதேச போக்குவரத்து துறை எனது கணவரின் கோரிக்கையை கேட்காத வண்ணம் செவிடாகிவிட்டது.  

பெரேலி மண்டல மேலாளர் தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால், எனது கணவர் தரப்பு வாதங்களை அவர் கேட்கவில்லை” என்றார். பேருந்தை மோஹித் யாதவ் நிறுத்துவதற்கு முன், அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ”நாங்களும் இந்துக்கள்… இந்து, முஸ்லிம் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு நிமிடங்கள் பேருந்தை நிறுத்தினால், என்ன நடக்கும்” என்பதுபோல் அந்த வீடியோ விவரிக்கிறது.

Share This Article
Leave a review