அன்னூருக்கு ஒரு நியாயம்.! கடலூருக்கு ஒரு நியாயமா.? – அன்புமணி விளாசல்.!

0
116
அன்புமணி ராமதாஸ்

அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயம் என்பது போல என்எல்சி விவகாரத்தில் அண்ணாமலை  பேசுகிறார் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி. என்எல்சி பிரச்சனை ஸ்டெர்லைட் ஆலையை விட 100 மடங்கு பெரிய பிரச்சனை ,பாமகவின் நோக்கம் 2026 புதிய கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்போம் , அதற்கு காலம் நேரம் வரும் , நேரம் வரும்போது சொல்வோம்.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் மதுரை மாநகர் பாமக அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது :

தென் மாவட்டங்களில் வேலை இல்லாத சூழலாலே கலவரம் பிரச்சனைகள் உருவாகிறது, மதுரை மாநகர் சுகாதார சீர்கேடாக உள்ளது, காவிரி -வைகை – தாமிரபரணி இணைப்பு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், தாமிரபரணியும் வைகையாறும் மோசமான நிலையில் உள்ளது. வைகை ஆறு சாக்கடை போல உள்ளது சங்ககாலத்தில் வைகை ஆற்றை எவ்வளவு பாடல்கள் உள்ளது. ஆனால் இன்றைய நிலை சாக்கடையாக மாறிவிட்டது, தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டு தோறும் 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து  நீர் பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும், தமிழகத்தின் மொத்த கடன் 12.5 லட்சம் கோடி திமுக அரசு இரண்டு ஆண்டுகாலத்தில் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்

திமுக தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தீர்கள் ஒரு வாரத்தில் நீட் ரத்து எனக் கூறினீர்கள் ஆனால் பண்ணவில்லை,
மாத மாதம் மின் கணக்கீடு சொன்னீர்கள் செயல்படுத்தவில்லை, பழைய ஓய்வூதிய திட்டம் என வாக்குறுதி அளித்தீர்கள் கொண்டு வரவில்லை,  ஜாக்டோ ஜியோ திமுகவிற்கு வாக்களித்தார்கள்.
ஆனால் தற்பொழுது திமுக அரசு அவர்களுக்கு நாமம் போட்டு விட்டார்கள்.

பஞ்சாப் , மேற்குவங்காளம் , சத்தீஸ்கர் ராஜஸ்தான் , ஹிமாச்சல் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏன் திமுக அரசு செயல்படுத்தப்படவில்லை. திமுக அரசு தங்களது பிரதான தேர்தல் வாக்குறுதிகளையாவது  நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு வேளாண் சார்ந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள், காலநிலை மாற்றம் தற்போது காலநிலை அச்சுறுத்தல் என்ற நிலைக்கு மாறிவிட்டது , 40 ஆண்டுகளுக்கு பின்பாக இது போன்ற நிலை உருவாகும் என எதிர்பார்த்தோம் ஆனால் இப்போதே உருவாக்கி விட்டது.

அன்புமணி ராமதாஸ்

விளை நிலங்களை கையகப்படுத்தாதீர்கள் விளைநிலங்களை காப்பாற்றுங்கள் விவசாயிகளுக்கும் , விவசாய நிலங்களுக்கும் அரணாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விளை நிலங்கள் கையகப்படுத்தி பெரு முதலாளிகளிடம் ஒப்படைத்து வருகிறது அது தேவையில்லாத ஒரு சூழல் நெய்வேலியில் அக்கிரமம் அட்டூழியம் நடந்து வருகிறது, என்எல்சி என்ற மோசடி நிறுவனம் ஒன்பது ஆண்டுகாலத்தில் நாற்பதாயிரம் ஏக்கர் விளை நிலங்களை அழித்து நாசப்படுத்தி
மண்ணையும் நீரையும் உறிஞ்சி கடலில் அனுப்பி வைத்து ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது.

என்எல்சிக்கு இன்றைக்கு மிகப்பெரிய ஆதரவு செய்கின்ற தமிழக அரசு கண்டிக்கின்றோம் இது உங்களுடைய வேலை கிடையாது. விவசாயிகளின் விவசாய நிலங்களை பாதுகாப்பது தான் உங்களுடைய வேலை அதை விடுத்து என்எல்சிக்கு தமிழக அரசு ஏஜெண்டுகளை போல செயல்பட்டு வருகின்றனர், அங்குள்ள அமைச்சர்களும் காவல்துறையினரும் என்எல்சியுடைய பணியாளர்கள் போல செயல்படுகின்றனர்.

அன்புமணி ராமதாஸ்

66 ஆண்டுகளுக்கு முன்பு என்எல்சி தேவை இருந்தது தற்போது என்எல்சியுடைய தேவை இல்லை,மின்சாரத்திற்கு எவ்வளவோ மாற்று வழி உள்ளே உள்ளது. ஆனால் சோறுக்கு மண் மட்டும் தான் உள்ளது ஆனால் மண்ணை அழித்து விவசாயிகளை அழித்து முட்டாள்தனம் செய்யாதீர்கள். விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை கையப்படுத்துவது கோழைத்தனம் விவசாயிகளுக்கு எதிரான அரசாங்கம் தான் இதனை செய்யும், இதனை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம் 40 ஆண்டுகாலம் போராட்டம் நடத்தி வருகிறோம் இதன் நோக்கம் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே! தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளதாக செந்தில் பாலாஜி கூறினார் வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்கும் வகையில் மின்மிகை மாநிலமாக இருப்பதாக தெரிவித்த நிலையில் ஏன் என்எல்சியிடம் உள்ள  800 மெகா மின் உற்பத்திக்கு விவசாய நிலங்களை அழிக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தின் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் என்எல்சி பங்கு 800 மெகாவாட் மட்டும் தான். இதற்கு முன்பு 40 ஆயிரம் ஏக்கர் அழித்துவிட்டார்கள் தற்பொழுது 50,000 ஏக்கர் கேட்கிறார்கள் நிலத்தை அழித்து மின்சாரத்தை பிச்சை போடுகிறார்கள்.
காசு கொடுத்து தான் மின்சாரத்தை வாங்குகிறோம், அப்படி நிலத்தை கொடுத்து மின்சார வாங்க வேண்டிய தேவை கிடையாது.
என்எல்சி நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியது தானே,  தூத்துக்குடியில் என்எல்சி யும் TANGEDCO இணைந்து  வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து மின்சார உற்பத்தி செய்கிறது. அதுபோல செய்யலாம், நானும் டெல்டாகாரன்தான் சொன்னால் மட்டும் போதுமா அப்படி சொன்னால் டெல்டா மாவட்டத்தை பாதுகாப்பது அவரது கடமை அல்லவா?

கதிர் வரும் நெல்லை அளிக்கும் காட்சியை விட்டு நீதிபதியே கண்ணீர் விட்டேன் எனக் கூறியிருக்கிறார், விவசாயத்தை அழித்துவிட்டு சோற்றிற்கு  என்ன செய்வீர்கள் என நீதிபதியே கேட்டுள்ளார். நீதிபதி அவ்வளவு கேட்டும் மீண்டும் நிலத்தை கையகப்படுத்தும் வேலையை தொடங்கிவிட்டனர்.திமுக அரசு விவசாயிகளின் எதிரி என்பதை எல்லா விவசாயிகளும் உணர்ந்து இருக்கிறார்கள். பாமக மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த தியாகமும் செய்ய வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளோம். என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் விற்பனை செய்வதற்காக திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. உள்நோக்கத்தோடு என்எல்சி நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கின்றீர்கள், என்எல்சி நிறுவனத்தை வாங்க உள்ள தனியார் நிறுவனத்திற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இல்லை என்றால், ஆட்சிக்கு பிரச்சனை உருவாகும் சூழல் உருவாகி உள்ளது, என்எல்சி தமிழகத்தின் பிரச்சனை ஸ்டெர்லைட் ஆலையை விட 100 மடங்கு பெரிதான பிரச்சனை இது. வளர்ச்சி திட்டம் கிடையாது மண்ணையும் வாழ்வையும்  அழித்து கொண்டு வருவது.
என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்எல்சிக்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும், என்எல்சி மூன்று தலைமுறைகளை நாசப்படுத்தி வருகின்றனர்,
என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசு எப்போது டாஸ்மாக் கடைகளை மூடப் போகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். படிப்படியாகவாது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இந்த அரசு மதுவை விற்கவில்லை மதுவை திணித்து வருகிறார்கள், அதி வேகமாக மதுவை திணிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நினைத்தார்.

நெய்வேலி போராட்டத்தின் போது

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது, பள்ளிக்கூடம் கல்லூரி வாசல்களில் கூட கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. கஞ்சா 1.0 தொடங்கி 4.0 என கூறி சிலரை கைது செய்து சில நாட்களில் வெளியில் விட்டுவிடுவார்கள், இதெல்லாம் தலைமுறையை அழிக்கின்ற பிரச்சனை எனவே முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும். மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படுத்த வேண்டும்

விவசாயிகளுக்கு கேடயமாக இருப்போம் தவிர விவசாயிகளை கேடயமாக பயன்படுத்த மாட்டோம். விவசாயிகளுக்காக நாங்கள் உயிரையே கொடுப்போம். விவசாயிகளின் உரிமைகளுக்காக உணர்வுபூர்வமாக உண்மையாக போராடுகின்ற கட்சி பாமக தான்.
விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டுமென கூறியது நாங்கள் தான். வேளாண்மைக்கு எதிராக எந்த பிரச்சனை நடந்தாலும் முதலில் வருவது பாமக தான்

தங்கம் தென்னரசுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே  தெரியாது, மின்சாரத்துறை அமைச்சர் என்பதால் அதனுடைய விளைவுகள் தெரியாமல் பேசி வருகிறார். இது தங்கம் தென்னரசுடைய பிரச்சனை கிடையாது தமிழகத்தின் பிரச்சனை. மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது என்எல்சி பங்களிப்பான 800 மெகாவாட் மின்சாரத்திற்காக ஐம்பதாயிரம் ஏக்கர் விலை நிலங்களை ஏன் அழிக்க பார்க்கிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பாக விவசாய நிலங்களை எடுத்திருக்கிறீர்கள் என்றால் எடுத்தால் அழித்து விட வேண்டுமா? என்எல்சி நிலக்கரியை இறக்குமதி செய்து வேண்டுமானால் செயல்படட்டும்.

அமைதியான போராட்டத்தை, காவல்துறையினர் பாமக தொண்டர்களின் மண்டையை உடைத்ததால் மட்டுமே பிரச்சனையாக மாறியது. காவல்துறையினர் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்கினர். நாங்கள் நினைத்தால் எங்களுக்கு வன்முறை செய்யத் தெரியாதா? ஆனால் அமைதியான அரசியல் வளமான அரசியல் என்பதே எங்களது நோக்கம். அண்ணாமலை அன்னூர் சிப்காட் நிறுவனம் கொண்டு வர 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்ட போது தரிசு நிலத்தை கையகப்படுத்தப்பட்ட போது அதனை கையகப்படுத்தக் கூடாது என அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமியும் நேரில் சென்று போராட்டம் நடத்தினார்கள். அந்த திட்டத்தை அரசு நிறுத்தி விட்டார்கள்

அங்கே சிப்காட் வந்தால் 20,000 தமிழர்களுக்கு வேலை கிடைத்திருக்குமே ஏன் தடுத்து நிறுத்தீனீர்கள். அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா? சோறு போடும் நிலத்தை அழிக்காதீர்கள் என டெல்லியில் சென்று அண்ணாமலை கூற வேண்டும் , டெல்லியில் சென்று வாதிட்டு என்எல்சி விவகாரத்தை அண்ணாமலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
என்எல்சி நிறுவனத்தில் தமிழர்கள் பணி புரிகிறார்கள் என அண்ணாமலை கூறும் தமிழர்கள் என்எல்சி அதிகாரிகள் வீட்டில் தோட்ட வேலையில் தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

அமைதியான போராட்டத்தை, காவல்துறையினர் பாமக தொண்டர்களின் மண்டையை உடைத்ததால் மட்டுமே பிரச்சனையாக மாறியது. காவல்துறையினர் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்கினர். நாங்கள் நினைத்தால் எங்களுக்கு வன்முறை செய்யத் தெரியாதா? ஆனால் அமைதியான அரசியல் வளமான அரசியல் என்பதே எங்களது நோக்கம். அண்ணாமலை அன்னூர் சிப்காட் நிறுவனம் கொண்டு வர 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்ட போது தரிசு நிலத்தை கையகப்படுத்தப்பட்ட போது அதனை கையகப்படுத்தக் கூடாது என அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமியும் நேரில் சென்று போராட்டம் நடத்தினார்கள். அந்த திட்டத்தை அரசு நிறுத்தி விட்டார்கள்

அங்கே சிப்காட் வந்தால் 20,000 தமிழர்களுக்கு வேலை கிடைத்திருக்குமே ஏன் தடுத்து நிறுத்தீனீர்கள். அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா? சோறு போடும் நிலத்தை அழிக்காதீர்கள் என டெல்லியில் சென்று அண்ணாமலை கூற வேண்டும் , டெல்லியில் சென்று வாதிட்டு என்எல்சி விவகாரத்தை அண்ணாமலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
என்எல்சி நிறுவனத்தில் தமிழர்கள் பணி புரிகிறார்கள் என அண்ணாமலை கூறும் தமிழர்கள் என்எல்சி அதிகாரிகள் வீட்டில் தோட்ட வேலையில் தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பாமகவின் நோக்கம் 2026 புதிய கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அமைக்க வேண்டும் அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்போம். அதற்கு காலம் நேரம் வரும், நேரம் வரும்போது சொல்வோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here