துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

0
62
சென்னை உயர் நீதிமன்றம்
  • துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டீ சர்ட் அணிந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்த ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த டி ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், முதலமைச்சர் , துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகள் வகுக்கக் கோரியும் மேலும் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இரு வழக்குகளும் தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது ஒரே விவகாரத்துக்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு முதலில் தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுதாரர் சேர்க்க கோரலாம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து இரு மனுக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/case-against-chief-minister-stalins-withdrawal-of-flyover-scam-case-against-minister-ponmudi/

அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கில் இடையிட்டு மனுதாரர்களாக சேர்க்க கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here