300க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள்., கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம்.!

0
102
கைத்தறி நெசவாளர்

பட்டு நெசவுத் தொழிலுக்கு பெயர்போன காஞ்சிபுரம், இன்று பட்டுப்போய் விடுமோ என்ற அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் நெசவாளிகள். காஞ்சிபுரத்தில் நாளுக்கு நாள் பட்டு நெசவுத் தொழில் நலிவடைந்து வருகின்றது.

கைத்தறி துணி உற்பத்தியில் அனைத்து ரகங்களிலும் விசைத்தறி உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இருப்பினும், நவீன இயந்திரங்கள் உற்பத்தி செய்ய முடியாத ரகங் களை, மனித தொழில் திற னால் மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கும் தனித்தன்மை வாய்ந்த பட்டு நெசவாளர்களாக காஞ்சி நெசவாளர்கள் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

2009-10 நிதியாண்டு வரை காஞ்சி நகரத்தின் பட்டு சேலை வர்த் தகம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சேர்த்து ரூ.250 கோடி வரை நடைபெற்றுள்ளது. காஞ்சி பட்டு வர்த்தகம் தற்போது ரூ.300 கோடியை தாண்டியிருக்கும்.

வளர்ந்து வரும் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை வியாபாரிகளும், ஜவுளி உற்பத்தியாளர்களும், இடைத்தரகர்களும் பகிர்ந்துகொண்டார்களே தவிர, பட்டு சேலை படைப்பாளிகளுக்கு துளியும் சென்று சேரவில்லை என்பது உலகம் அறியாத செய்தி.

அது ஒரு புறம் இருக்க, காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாத்திட,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஒன்று கூடி ஊர்வலமாக சென்று கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாத்திட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே கைத்தறி சங்கம் மாவட்ட தலைவர் ஜி எஸ் வெங்கடேசன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஒன்று கூடி ஊர்வலமாக சென்று காமாட்சி அம்மன் காலணியில் அமைந்துள்ள கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைத்தறிக்கு என்று ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் நெசவு செய்யக்கூடாது,விசைத்தறி சேலைகளால் கைத்தறி பட்டு சேலைகள் விற்பனை பாதிப்பு, வெளி மாநிலங்களில் இருந்து விசைத்தறியில் கைத்தறி பட்டு ரகங்களை உற்பத்தி செய்து தமிழ்நாட்டில் சந்தைப்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் கைத்தறி நெசவாளர்களின் ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பலத்த
போலீஸ் பாதுகாப்பும் போடப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here