யார் – யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை. முன்னாள் அமைச்சர் காமராஜ் .

0
88
முன்னாள் அமைச்சர் காமராஜ்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக நிர்வாகிகள் கூட்டம், முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மாநாட்டு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில், இன்னும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. ஆற்றுக்கு தண்ணீர் வந்தால் மட்டும் போதாது, கிளை வாய்க்கால்களுக்கும் தண்ணீர் வர வேண்டும். அப்போதுதான் முழுமையான பாசனம் செய்ய முடியும், எனவே முறை வைக்காமல் 18,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நேற்று டிடிவி தினகரன் நாடாளுமன்ற தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து சந்திக்க உள்ளதாக கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு,

அதிமுகவிற்கு எந்த  காலத்திலும் பின்னடைவு வந்தது கிடையாது. யார் யாருடன் சேர்ந்தாலும் பாதிப்பில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பையும் எவரும் ஏற்படுத்த முடியாது.

அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா என்று கேட்டதற்கு,

ஏன் இந்த சந்தேகம். வலுவான கூட்டணியில் இருக்கிறோம். அதிமுக வலிமையான கூட்டணியில் இருக்கிறது.  நாடாளுமன்றத்தில் மிகப்வெற்றியை பெறுவோம் என அவர் தெரிவித்தார். என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here