சிறையாளிகளை கண்டு கொள்ளாத அரசியல் கட்சி தலைவர்கள்..!

Jothi Narasimman
2 Min Read

இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் உரிமையை வழங்கி அதன் மூலம் 100% வாக்குகளை பதிவு செய்யும் முயற்சியில் ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் அது தோல்வியிலேயே தான் சென்று முடிகிறது.

- Advertisement -
Ad imageAd image

தற்போது தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு முறையில் வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்தியாவின் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், வாக்களிக்க தகுதியுள்ள அனைத்து இந்திய குடிமக்களும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தவும், தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஒரு தனிநபரின் ஜாதி, மதம், சமூக அல்லது பொருளாதார நிலை ஆகியவற்றை பொருட்படுத்தாமல், 18 வயதுக்கு மேற்பட்ட நல்ல மனதுடன் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ளது.

சிறையாளிகளை கண்டு கொள்ளாத அரசியல் கட்சித் தலைவர்கள்

இந்த உரிமை ஒரு சில விதி விலக்குகளுடன் அனைத்து இந்தியர்களுக்கும் உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வாக்காளராக, வாக்காளரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் படி, சில உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. இதனால் குடிமக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதற்கான நிபந்தனைகளையும் இது வகுத்துள்ளது.

இந்திய அரசிலமைப்பு சட்டம்

அப்போது வாக்களிப்பது ஒரு அடிப்படை உரிமை அல்ல, ஆனால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமை. ஆனால் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் போதும் சிறையாளிகளை வாக்களிக்க அனுமதிப்பதில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 326 அனைவருக்கும் வாக்களிக்க உரிமை உள்ளது என்று அறிவிக்கிறது. மேலும் சிறையாளிகளும் இந்திய குடிமக்கள் தான் அவர்களுக்கும் வாக்குரிமை உண்டு. இந்த அரசியலமைப்பின் கீழ் யாரும் தகுதியற்றவர் அல்ல.

இந்திய தேர்தல் ஆணையம்

மேலும் வசிப்பிடமின்மை, மனநலமின்மை, குற்றம் அல்லது ஊழல் அல்லது சட்டவிரோத நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தமான சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தச் சட்டமும், அத்தகைய தேர்தலில் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமை உண்டு என்று சொல்லுகிறது.

அப்படி இருக்க எந்த அரசியல் கட்சிகளும் இந்த சட்டத்தை கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. இப்போது சிறையாளிகளுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும். அரசு என்பது தான் நடைமுறை அரசு செயல்படுத்துமா? என கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review