கண்டக்டராக வேலை செய்த பெங்களூர் மாநகராட்சி போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெங்களூர் மாநகராட்சி போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் கண்டக்டர்களை சந்தித்து பேசினார் அவர்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்தின் திடீர் வருகையால் அங்கிருந்த பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு ஓட்டுநர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். பெங்களூர் மாநகராட்சி போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் மிகவும் சிறப்பாக உள்ளது. என பாராட்டினார்கள்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடடையே கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ500 கோடிக்கு மேல் வசூலித்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இதனிடையே படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இமயமலை பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய நிலையில், பிரபலங்கள் பலரையும் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் உத்திரபிரதேச முதல் யோகி ஆதித்யநாத், சண்டிகார் ஆளனர் சி.பிராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலரையும் சந்தித்து வருகிறார். மேலும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில துணை முதல்வருடன் இணைந்து ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை பார்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் யோகி படம் பார்க்க வராத நிலையில், துணை முதல்வர் படத்தின் பாதியிலேயே அலுவலல் வேலையாக கிளம்பிவிட்டார் என்று கூறப்பட்டது.
இதனிடையே யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும்போது அவரை விட வயதில் பெரியவரான ரஜினிகாந்த் அவரின் காலில் விழுந்து வணங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துறவிகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுந்து வணங்குவது எனது வழக்கம் என்று சென்னை திரும்பியவுடன் ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கர்நாடக அரசு பெருந்தில் நடத்துனராக வேலை செய்த நடிகர் ரஜினிகாந்த் இன்று தான் வேலை செய்த பணிமனைக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
தான் நடத்துனராக இருக்கும்போது ஓட்டுநராக பணியாற்றிய தனது சிறந்த நண்பர் ராஜ் பகதூருடன் ஜெயநகர் பேருந்து நிலையத்திற்கு சென்ற ரஜினிகாந்த் மற்றும் பஸ் டிரைவர்கள் மற்றும் பிஎம்டிசி நடத்துநர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.