தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்த குரங்கு குட்டி விவகாரம் : குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு..

0
70
சென்னை உயர் நீதிமன்றம்
  • தெரு நாய்களால் கடிபட்டு கால்நடை மருத்துவரின் சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கால்நடை மருத்துவர் வல்லயப்பன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் கொண்டு வந்ததாகவும், சுமார் 10 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு குட்டியை வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால், குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குரங்கு குட்டியை பார்வையிட கால்நடை மருத்துவருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த 9ம் தேதி கால்நடை மருத்துவர் வல்லியப்பன், தனது மகள் மற்றும் வழக்கறிஞருடன் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை பார்வையிட்டனர்.இந்த நிலையில், வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் தரப்பில் வழக்கறிஞர் ஶ்ரீனிவாசன் தாக்கல் செய்த அறிக்கையில், தற்போது, குரங்கு குட்டிக்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உரிய சிகிச்சையும், சிறந்த உணவும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டது.

சிகிச்சைக்காக மட்டுமே குரங்கு மனுதாரரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஆனால், ராணிப்பேட்டையில் இருந்து கோவைக்கு சட்டவிரோதமாக குரங்கைக் கடத்தியதாகவும், அதிகாரிகள் குரங்கை சரணடையுமாறு தெரிவித்தும், மீண்டும் ஓசூருக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலின் இணையதளத்தை சரிபார்த்தபோது, மனுதாரர் பெயர் நீக்கபட்டிருந்ததாகவும், குரங்கு குட்டியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/

இதையடுத்து நீதிபதி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது என மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மனுதாரர் தரப்பில், குரங்கு குட்டியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here