மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள் கரடி சிறுத்தை புள்ளிமான் காட்டெருமை அதிக அளவில் வனவிலங்குகள் வசித்து வருகின்றன மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்ப பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளதால் வழியே கூட்டம் கூட்டமாக யானைகள் செல்வது வழக்கம்.இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் இரண்டு காட்டு மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் 3 வது கொண்டை ஊசி வளைவில் இரண்டு காட்டு யானைகள் சுற்றுலா வாகனங்களை வழிமறித்தது.யானையை பார்தத உடன் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டனர்.சுமார் 30 நிமிடம் யானை சாலையில் நின்றது இதனால் ஊட்டி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.